Sunday, December 14, 2008

கூடாது என்று ஒன்றில்லை

செய்ய முடியாததை நினைக்க கூடாது என்றால் 
நிலாவை தொட்டிருக்கவே மாட்டர்கள் ....!!!
சொல்லமுடியாததை எழுத கூடாது என்றால் 
கவிதைகள் வரைந்திருக்கவே மாட்டார்கள் ....!!
கசப்பதை எல்லாம் உண்ண கூடாது என்றால் 
சிலர் உயிர் வாழவே மாட்டர்கள் .....!!

Tuesday, December 9, 2008

simple as that

அவற்றை விட்டு விலக சொன்னேன் 
அவை விலகவில்லை .....!!
நான் விட்டு விலகி நின்றேன் 
அவையும் விலகிவிட்டன ....!!!

குறி

வெட்ட வெளியில் பறந்துகொண்டிருந்தேன் 
வெய்யில் என்னை சுடவில்லை 
மழை என்னை நனைக்கவில்லை
புயல் என்னை தடுக்கவில்லை 
ஏனென்றால் நான் பறப்பதில் மட்டும் குறியாய் இருந்தேன் 

Thursday, November 27, 2008

வாய்ச் சொல்லில் வீரர்

எல்லோரும் சமம் என்பார்கள் 
உண்பதெல்லாம் கொடுத்து உண்பார்கள் 
செய்வதெல்லாம் சேர்ந்து செய்வார்கள் 
உதவி என்றால் ஓடிவருவார்கள் 
காதல் கலியாணம் என்றால் மட்டும்
சரிவராது என்பார்கள் ......!!!

நிறைவு

கால் உடைந்தும் வால் ஆட்டிக்கொண்டிருக்கும் - நாய்
நீர் இழந்தும் பூத்துக்கொண்டிருக்கும் - மரம் 
வீடு இழந்தும் ரோட்டில் விளையாடும் - ஏழை குழந்தை 
எல்லாம் இருந்தும் மனம் நொந்தபடி எப்போதும் - அவர்கள்

அக்கறையின்றி

மரங்கள் எல்லாம் ஆடிக்கொண்டிருந்தன
அலைகள் எல்லாம் ஓடிக்கொண்டு இருந்தன  
காகிதங்கள் எல்லாம் பறந்துகொண்டிருந்தன  
முகில்கள் எல்லாம் கறுத்துக்கொண்டிருந்தன
நான் குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருந்தேன் ...!!

Monday, November 17, 2008

உறக்கம்

வெளியே நித்திரை கொள்ளமுடியாமல்  
அழுதுகொண்டிருந்த என் நாய் குட்டியை  
உள்ளே கள்ளமாக கொண்டுவந்து  
தட்டிக்கொடுத்தேன் உறங்கிவிட்டது ... 
உள்ளே படித்துக்கொண்டிருந்த என் புத்தகத்தின் மேல் ....!

Saturday, November 15, 2008

பார்ப்போம்

விடிவுக்காக எழுதிக்கொடிருக்கிறேன் 
பார்ப்போம் விடிகிறதா என்று ...!!  
முடிவுக்காக எழுதிக்கொடிருக்கிறேன்  
பார்ப்போம் முடிகிறதா என்று ...!!  
தெளிவுக்காக எழுதிக்கொடிருக்கிறேன்  
பார்ப்போம் தெளிகிறதா என்று ...!!

தயார்

எழுவதுக்காக விழுவது என்றால் 
நான் விழத் தயார் ,.....! 
கிடைப்பதற்காக இழப்பது என்றால் 
நான் இழக்க தயார் .....!! 
சிரிப்பதுக்காக அழுவது என்றால்  
நான் அழத் தயார் ...!! 
வெல்வதுக்காக தோற்பது என்றால்  
நான் தோற்கத் தயார் ....!!

Friday, November 14, 2008

மனமே

அவர்கள் சொல்வார்கள் என்பதை விட்டுவிடு 
நீ கேட்டுவிடு ....!  
அவர்கள் கேட்பார்கள் என்பதை விட்டுவிடு  
நீ சொல்லிவிடு ...!  
உலகம் மாறும் என்பதை விட்டுவிடு 
நீ உன்னை மாற்றிவிடு ....!

Sunday, November 9, 2008

அவனுக்கு கிடைத்தவை

அவனுக்கு ஒரு உயிர் கிடைத்தது ....!  
அதனுடன் ஒரு இதயம் கிடைத்தது ....!  
இதை காக்க ஒரு மனம் கிடைத்தது ...!  
படித்தான் அறிவு கிடைத்தது ...!  

சிரித்தான் அன்பு கிடைத்தது ...!  

உழைத்தான் உயர்வு கிடைத்தது ....!  

நினைத்தான் நினைத்தது கிடைத்தது ...!! 
 
அவன் அவனுக்கு கிடைத்தான்

Sunday, November 2, 2008

இழப்பு

பணம் இழந்தேன்
உழைத்துக்கொண்டேன் ....!  
பொருள் இழந்தேன் 
வாங்கிக்கொண்டேன் ....!!
 
உறவுகள் இழந்தேன்  
உருவாக்கிக்கொண்டேன் ....! 
நினைவிழந்தேன்  
ஞாபகப் படுத்திக்கொண்டேன் ....!! 

எனை நான் இழந்தேன் 
எல்லாம் இழந்தேன் ...!!!!!

கிடைப்பதில்லை

சந்தர்ப்பம் கிடைத்தபோது 
மனம் விடவில்லை ....!!
மனம் இருக்கும்போது 
சந்தர்ப்பம் கிடைக்குதில்லை ......!!!

Saturday, November 1, 2008

காலம்

நான் வந்திருக்கும் இடம்
சரியானதா என்று முடிவேடுப்பதுக்குள்  

நான் வந்த வேலை  
முடிந்துவிட்டது ....!!!

சிதறிவிட்ட நான்

சிதறிவிட்ட என்னை - நான்  

தேடிக்கொண்டிருக்கிறேன் ....! 

தேடி எடுத்து  

ஒழுங்குபடுத்துவதுக்கு ....!

Saturday, October 18, 2008

உன்னாலே

சில சமயம் நான் தொலைந்தது போயிருக்கிறேன் 
என் நிழல்களுக்குள் ...!
சில சமயம் நான் மறந்து போயிருக்கிறேன் 
என் நிஜங்களை ...!
சில சமயம் நான் பறந்து போயிருக்கிறேன் 
என் கனவுகளுக்குள் ...!  

சில சமயம் இவை எல்லாம் உன்னாலே 

வாழ்க்கை

காலங்கள் நம்மை இடம் 
மாற்றியது ....!
நினைவுகள் நம்மை நினைக்க
வைத்தது ....!
விடியல்கள் நம்மை நம்ப 
வைத்தது ...!
கனவுகள் நம்மை ஜெயிக்க 
வைத்தது ....!

பொழுதுகள்

அந்த பொழுதுகள் எல்லாம்
மறந்து போயின ......! 
இந்த பொழுதுகள் எல்லாம் 
நினைவாய் மாறின .....! 
எந்த பொழுதுகள் எல்லாம்  
தொடரப் போகின்றனவோ ....!!

Thursday, October 2, 2008

அவள்

எழும்புவதுக்கு வழியில்லாமல்
நினைவில்லாமல் விழுந்துகிடந்த - அவளை
தீண்டுவதுக்கு கூட மனமில்லாமல்
வேடிக்கை பார்த்தவண்ணம் பலபேர் .....!!!

அவள் -- நகரம் முழுக்க பலர்
தீண்ட விரும்பாத அழுக்குகளை
அள்ளிப் போட்டுக்கொண்டு இருப்பவள் ....!

Sunday, September 28, 2008

என் பக்தி

பிடித்து தைக்க இடம் இல்லாத அளவுக்கு
கிழிந்து போன சட்டை .....!
வாரினால் சீப்பே உடைந்து போகும் அளவுக்கு
சிக்கிப்போன தலை மயிர் ...!
என்னிடம் வந்து ஐந்து ரூபாய் கேட்டாள்
கையை விட்டு கிண்டி எடுத்து
இரண்டு ரூபாய் கொடுத்தேன் ....!
நீ தெய்வம் என்று சொல்லிவிட்டு
கும்பிட்டு சென்றாள் .....!

கழுத்து நிறைய மின்னிக்கொண்டு
தங்க மாலைகள் ...!
உடம்பு முழுக்க சுத்தி கட்டியபடி
காஞ்சிபுர பட்டு சேலை ....!
நான் போய் தெய்வமே என்று
கும்பிட்டுவிட்டு - ஆயிரம் ரூபாய்
போட்டுவிட்டு வந்தேன்
உண்டியலில் .....!

எனக்கு புரிந்தது

என் யன்னலுக்கு வெளியே
அந்த நிலவின் வெளிச்சம்
என் அறையின் விளக்கை
அணைத்தபின் தான் தெரிந்தது ......!

என் மனதின் குழப்பத்தை
நான் மறந்த போதுதான்
இந்த உலகும் குழம்பியிருப்பது
புரிந்தது ...!!!

Thursday, September 25, 2008

விசித்திரம்

எல்லோரும் நான் அழுவேன்என்று நினைக்கையில்
நான் சிரித்துக்கொண்டிருந்தேன் ......!
எல்லோரும் நான் சிரிப்பேன் என்று நினைக்கையில்
நான் அழுதுகொண்டிருந்தேன் ......!




Saturday, September 20, 2008

அந்த குழந்தை

என் மடியில் ஏறியிருந்த அந்த குழந்தை
என் கையில் இருந்த ரேகைகளை எண்ணிக்கொண்டிருந்தது ....!
எண்ணிமுடியாது என்பதால்
என் விரல்களை எண்ணத் தொடங்கியது
இடையில் கணக்கு பிழைத்துப் போனது ....!
என்னை ஒருதடவை பார்த்துவிட்டு
பேசாது இருந்துவிட்டது - இவள்
கைகளிலும் ஏதோ கோளாறு என்று ...!!!

Sunday, September 14, 2008

வித்தியாசம்

சொர்க்கத்துக்கும் நரகத்துக்கும்
ஒரு சின்ன வித்தியாசம் தான் .....!
ஒன்று நான் சிரிக்கும் போது
இன்னொன்று நான் சிரிப்பதுபோல் நடிக்கும் போது ....!

Saturday, September 13, 2008

திரும்பிவரும் என்றால்

கடந்து போன பாதைகள் எல்லாம்
திரும்பி வரும் என்றால் ....!
கலைந்து போன என் கனவுகளை
நான் நிஜுமாக்கிகொள்வேன்....!
தொலைந்து போன என் வேகத்தை
திருப்பி தேடிக்கொள்வேன் .....!
பிழைத்துப் போன என் வழிகளை
திருத்திக்கொள்வேன் .....!

முதல் தோல்வி

வாழ்க்கையில் முதல் தடவை
தோற்றுப்போகும் தான் வேல்வதெல்லாம்
ஒருவிஷயமே இல்லை என்று படுகிறது .....!!!!

குழந்தையின் சிரிப்பு

வாழ்க்கையின் ஓரத்துக்கே தள்ளிவிடப்பட்டவளாய்
பஸ்ஸின் ஓரத்து இருக்கையில் நான்
வானத்தை வெறித்துக்கொண்டிருந்தேன் ......!
திடீர் என்று அந்த குழந்தை என்னை
எட்டிபார்த்து சிரித்துகொண்டிருந்தது --
இல்லை நீ என்னும் வாழலாம் என்று சொல்வதுபோல் ......!!!!!

Tuesday, September 9, 2008

தடை

நான் எதை செய்யப்போகிறேனோ
அதற்கெல்லாம் தடை வந்துவிடுகிறது ....!
ஆனால் இன்று தடைகளையே காணவில்லை ....!
ஏனென்றால் நான் எதுவுமே செய்யவில்லை .....!

Monday, September 8, 2008

புதிதாய்

இந்த காலை பொழுது
எத்தனை தரம் வந்தாலும் ....!
இந்த இரவு
எத்தனை தரம் வந்தாலும் ...!
நான் வாழ வேண்டிய பொழுதுகள்
எல்லாமே புதிதாய் தான் இருக்கின்றது ...!
அதனால் தான் நான் இன்னும்
புதிதாய் இருக்கிறேன் - எனக்கு ....!

Sunday, September 7, 2008

முடிவு

என் இதயம் முடிவெடுத்தது
ஏத்துக்கொண்டது ....!
என் மனம் முடிவெடுத்தது
மறுத்துவிட்டது ....!

மழை

திடீர் என மழை பெய்தது ....!
யன்னல் ஓரமாய் எட்டிப்பார்த்தேன்
என் தோட்டத்துப் பூக்கள் எல்லாம்
சந்தோசமாய் குளித்துகொண்டிருந்தன .....!
வெளியே கட்டிவைத்திருந்த
நாய் குட்டி மட்டும்
அழுதுகொண்டு இருந்தது ....!

Saturday, September 6, 2008

வரம்

கடவுளே ....!
உன்னிடம் நான் கேட்பதெல்லாம்
ஒரு துளி மழை - அதற்கு
ஒரு சின்ன குடை - அதற்குள்
ஒரு சின்ன கதிரை - அதில்
ஒரு சின்ன பேனாவுடன்
ஒரு வெள்ளை தாளில் - நான்
என்னை எழுதிக்கொண்டே இருக்கவேண்டும் ...!

கடவுளுக்கு தெரியும்

அந்த கடவுளுக்கு தெரியும்
எந்த நேரம் யாரை பிரிக்கவேண்டும்
எந்த நேரம் யாரை சேர்க்கவேண்டும்
எந்த நேரம் யாரை தனிமை படுத்தவேண்டும்
எந்த நேரம் யாரை சிறுமை படுத்தவேண்டும்
எந்த நேரம் யாரை பெருமை படுத்தவேண்டும் என்று ....!

Friday, September 5, 2008

ஒரு பயம்

கவிதைகளை எழுதிவிட்டு
உனக்கு காட்டும்போதெல்லாம்
எனக்குள் ஒரு பயம் ....!
ஏனென்றால் என் கவிதைகளுக்கு
பொய் சொல்லத்தெரியாது....!

சில நிமிடங்கள் நான் ....!

அடை மழையின் பின்
தெளிந்து கிடக்கும்
அந்த பாதை போல
சில நிமிடங்கள் நான் ....!

பல காலங்கள்
விறிச்சோடி கிடக்கும்
சோலை போல
சில நிமிடங்கள் நான் ....!

பலர் வாழ்ந்து சென்ற
கூட்டு குடும்ப வீடு போல
சில நிமிடங்கள் நான் ....!

பலர் சாதனைகள் படைத்து
விட்டு சென்ற மைதானம் போல
சில நிமிடங்கள் நான் ....!

Thursday, September 4, 2008

உனக்காக .....

உனக்காக நான் கதைப்பேன்
எனக்காக நீ
கேட்பாய் என்றால் ....!
உனக்காக நான் வரைவேன்
எனக்காக நீ
பார்ப்பாய் என்றால் ...!
உனக்காக நான் எழுதுவேன்
எனக்காக நீ ...!
வாசிப்பாய் என்றால் ...!
உனக்காக நான் என்னை
செதுக்குவேன்
எனக்காக நீ என்னை
ரசிப்பாய் என்றால் ...!

Tuesday, September 2, 2008

உனக்கு ஒரு கவிதை

உனக்காக கவிதை எழுதும் போதுதான் - என்னிடம்
வார்த்தைகள் வருவதில்லை ....!
எண்ணங்கள் நிலைப்பதில்லை ....!
நினைவுகள் திரும்புவதில்லை ....!
ஏன் என்றால் எனக்கு
ஏதோ கிடைக்கவில்லை .....!

நான் உறங்குவது பூவில்

என் தூக்கத்தை கெடுத்துவிட்ட - அந்த
சுட்டெரியும் சூரியன் மேல்
எனக்கு கோவம் ....!
கொட்டிக்கொண்டிருக்கும் மழை மேல்
எனக்கு கோவம் ....!
சுத்திக்கொண்டு இருக்கும் காற்றின் மேல்
எனக்கு கோவம் ....!
இவைக்கு எல்லாம்
இந்த பூவின் மென்மை எப்படி தெரியும் ....!

அர்த்தம் இல்லாத இவை

சில அர்த்தம் இல்லாத
நினைவுகள்
சில அர்த்தம் இல்லாத
கவலைகள்
சில அர்த்தம் இல்லாத
கோவங்கள்
சில அர்த்தம் இல்லாத
சிரிப்புகள்
எல்லாம் இன்று அர்த்தம் உள்ள
புது வாழ்க்கை ஆனது உன்னால் ......!

Monday, September 1, 2008

புறக்கணிப்பு

அன்பு புறக்கணிக்கப்படும்பொழுது
வெறுப்பாகிறது ....!
காதல் புறக்கணிக்கப்படும்பொழுது
கசப்பகிறது ....!
கவலை புறக்கணிக்கப்படும்பொழுது
கல்லாகிறது ...!

எங்கேயோ போகிறாய் ....!

எனக்கு தெரியும் - நீ
எங்கேயோ போகிறாய் ....!
எனக்கு தெரியும் - நீ
என்னை விட்டு போகிறாய் ....!
எனக்கு தெரியும் - நீ
எதற்காக போகிறாய் ....!
எனக்கு தெரியும் - நீ
எனக்காக போகிறாய் ....!

Friday, August 29, 2008

இவை எல்லாம் இவை அல்ல

கலைந்திருப்பவை எல்லாம்
கனவுகள் அல்ல ....!
நடந்திருப்பவை எல்லாம்
நினைத்தவை அல்ல .....!
கிடைத்திருப்பவை எல்லாம்
கொடுத்தவை அல்ல ....!
மறந்திருப்பவை எல்லாம்
மறுத்தவை அல்ல ....!
நினைவில் நிற்பவை எல்லாம்
நிஜங்களும் அல்ல .....!

சந்தோசம்

சந்தோசத்துக்காக அழுது
கிடந்த என்னை - நீ
சந்தோசத்தில் அழ வைக்கிறாய்
ஆனந்த கண்ணீராய் .....!

Thursday, August 28, 2008

முகமே

நான் சந்தோசமாய் இருக்கும் போது தான்
என் முகத்தை கண்ணாடியில்
பார்க்கவேணும் போல் இருக்கிறது....!

Monday, August 25, 2008

எழுத மறந்தவை

மறந்து போன என் நினைவுகளை
தேடுகிறேன் - எழுதாமல்
விடுபட்ட என் கவிதைகளை
எழுதுவதுக்கு ....!

அவளின் அழுகை

இறந்து போன உறவுகளுக்காக
அழுதுகொண்டு இருக்கிறாள் --- தொட்டிலில்
பாலுக்காக அழுதுகொண்டு இருக்கும்
குழந்தையை மறந்து விட்டு

Friday, August 22, 2008

ஒன்றும் இல்லாமல்

சந்தோஷமான நாட்களையும்
துக்கமான நாட்களையும்
எண்ணிக்கொண்டு போனேன் என் வாழ்நாளை கணக்கிடுவதுக்கு
இவை இரண்டும் இல்லாத நாட்களை மறந்துவிட்டு ....!

தயார்

ஒரு நாள் ......
என் கனவுகள் நனவாகும்
என் ஆசைகள் நிறைவேறும்
என் துன்பங்கள் தொலைந்துபோகும்
என் குழப்பங்கள் தெளிவாகும்
என்றால் நான் இன்னும் வாழ தயார் ....!
இல்லையேல் நான் என்னும் போராடவும் தயார் ....!

காத்துக்கிடப்பு

வானம் நிலவுக்காக காத்துகிடக்கிறது
நிலவு இரவுக்காக காத்துகிடக்கிறது
இரவு எனக்காக காத்துகிடக்கிறது
நான் எதுக்காக காத்துகிடக்கிடக்கிறேன் என்று புரியவில்லை ......!

கோவம் .. நேசம் ...

இருக்கும் வரை தான் உன்னோடு கோவம்
இல்லாத போது உன்மீது நேசம்
ஏன் என்றால் உன் அருமை அப்போது தான் தெரியும்

Monday, August 18, 2008

சந்தோசத்தில் என் மனம்

சந்தோசமாய் இருக்கும் போது
சத்தமின்றி இருந்து பார்த்தேன்
என் மனம் என்னவெல்லாம்
நினைக்கிறது என்று கண்டுபிடிக்க .......!
அது சொன்னது இப்போ என்னிடம்
நினைக்க ஒன்றும் இல்லை என்று .....!

Sunday, August 17, 2008

பறந்து பார்

பட்டாம் பூச்சிகளை பிடித்துக்கொண்டு
அழகு பார்த்துகொண்டிருந்தேன் ....!
அது சொன்னது பிடித்துப்பார்க்கதே
நீயும் பறந்து பார் என்று ....!

அடையாளம்

அடர்ந்த காடு , சின்ன ஓடை
அழகிய மரம் , அதன் அடியில்
ஒரு குடில் .....!
இலைகளால் ஒரு கூரை
அதன் அடியில் ஒரு யன்னல் ...
அதில் கம்பிகள்
அதை பிடித்துக்கொண்டு
அழகிய விரல்கள் ....!
கவ்விகொண்டிருக்கும் சின்ன மோதிரம் ......
பொறித்திருக்கும் உன் முதல் எழுத்து
ஐம்பது வருட வாழ்க்கையின் அடையாளமாய் ....!

Saturday, August 16, 2008

நான் நானாக

நான் என்னை பார்த்துக்கொள்வதால் தான்
நீ என்னை இப்போ பார்க்க முடிகிறது
அதே நானாக .....!

அதிசயம்

நான் ஒரு அதிசயம் ....!
எல்லை இல்லாத துன்பத்திலும் சிரிக்கிறேன்....!
அளவு கடந்த சந்தோசத்திலும் அழுகிறேன் ....!

Thursday, August 14, 2008

தேடுகிறேன் என்னை

காலத்தின் ஓட்டத்தில்
தொலைந்து போயிருக்கும் என்னை தேடுகிறேன்....!
வாழ்க்கையின் தீபத்துக்குள்
உருகிப்போயிருக்கும் என்னை தேடுகேறேன் ...!
கவலையின் கோபத்தில்
இறுகிப்போயிருக்கும் என்ன தேடுகிறேன் ...!

என்னை

மனம் கலைந்து,
நினைவுகள் தொலைந்து
உண்மைகள் ஒழிந்து
விருப்பங்கள் அழிந்து
போய் இருக்கும் என்னை
யாருக்கு தான் பிடிக்கும் .....!

Sunday, August 10, 2008

தயார்

இப்போ வேண்டுமானாலும் இறக்க
நான் தயார் என்றாயே ....!
உன் ஆன்மாவுக்கு அழிவே இல்லை என்று
தெரிந்துகொண்டு ....!!!!

ஆசை

ஆசையே இல்லாமல் வாழப்போகிறேன்
என்றாயே ....!
வாழ வேண்டும் என்ற ஆசையோடு ....!

ஏய் பட்டாம் பூச்சி .......!

ஒரு நாள் உன்னை எட்டிப் பிடிக்காமல்
விடமாட்டேன் பட்டாம் பூச்சியே ........!
நீ என்னை அடிக்கடி சுதந்திரம்
இல்லாதவள் என்று குத்திக்காட்டிக்கொன்று இருக்கிறாய் .........!

Saturday, August 9, 2008

கைவிடப்பட்ட சிலையாய் இருந்த என்னை
சிலகாலமாய் செதுக்குபவன் நீ ............!
எனக்குள் இருக்கும் குழந்தைக்கு
பெயர் வைத்தவன் நீ ....!
உனக்குள் இருக்கும் குறும்புக்கு
கொடி அசைத்தவள் நான் ..................!

சிறகுகள்

அந்த வண்ணாத்தி பூச்சிக்கு
இரண்டு சிறகுகள் ....... வானம் எங்கும் பறப்பதற்கு .......!
என் சிந்தனைக்கு
ஆயிரம் சிறகுகள் ....... வாழ்க்கை எங்கும் பறப்பதற்கு .......!
பசித்திருந்த பூமிக்கு மழை போல
என் கவிதைக்கு உன் எதிர்பார்ப்பு
நான் அவன் தொலைந்துவிட்டான்
என்று தேடிக்கொண்டிருந்தேன்
ஆனால் அவன் தொலைத்திருப்பது
என் காதலை ....!

உனக்கு தெரியும்

இதயத்தில் இருக்கும் என் சந்தோசத்தை
விழிகளால் விளங்கி கொள்ள உன்னால் மட்டும் தான் முடியும்
ஏன் என்றால் என் இதயத்தை விழிகளால் பார்க்க
உனக்கு மட்டும் தான் தெரியும் ............!

Monday, July 28, 2008

உதவி

என்னால் முடிந்தது எல்லாம்
ஒரு புன்னகை ..!
ஒரு பரிதாப பார்வை ..!
ஒரு பத்து ரூபாய் ...........!
அந்த ஏழை சிறுமிக்கு ..........!

Saturday, July 26, 2008

நினைவுகள்

காணமல் போன என் கவிதைப்
புத்தகத்தை தேடுகிறேன்
மறந்து போன என் நினைவுகளை
மீட்பதற்கு ........!

Thursday, July 24, 2008

என் மனம்

முடிவிலி வரை என் மனம் சென்றலும்
வந்து முடிவது உன்னிடம் தான் ......!

காதல் என்னவெல்லாம் செய்கிறது

காதல் மட்டும் இல்லை என்றால்
இங்கே சிலர் ஜனநாயகம் பேசியிருக்க மாட்டர்கள் ....!

மரணம்

என் ஆசைகளுக்கு ,
என் கனவுகளுக்கு,
என் சோகங்களுக்கு ,
என் தேடலுக்கு ,
என் உடலுக்கு மட்டும்
ஒரு முற்றுபுள்ளி நீ............!

பயம்

எதிர்பார்ப்பதே இல்லை நான்
ஏமாற்றங்களுக்கு பயந்து ..............!

நான்

அடர்ந்து வளரும் ஆலமரம்
நான் - என்னை
அறைக்குள் வைத்து வளர்க்கபார்க்கிறாய் நீ .....!

குழப்பம்

குழம்பியதும் தெளிவாக என் மனம் என்ன சேத்து நீரா.....!

Tuesday, June 17, 2008

welcome


Kandukonden