Monday, December 21, 2009

களைத்துப் போய்விட்டேன்










எதையுமே ஒருதடவையில்  சொல்லி நம்பாதவர்களை 

ஒரு கேள்விக்கு இன்னொரு கேள்வி கேட்பவர்களை 

தவறுகளும் யதார்த்தம் என்று ஏற்காதவர்களை 

பார்த்து பார்த்து.......
 நான் களைத்துப் போனேன்  .......

Tuesday, December 1, 2009

லண்டனில்

எழுத யோசித்து கைகள் வைக்கும் போது

கைகள் விறைத்துப்போகிறது......

சிரிக்க யோசித்து உதட்டை பிரிக்கும் போது

உதட்டில் ரத்தம் கசிகிறது ......

நடக்க யோசித்து கால்கள் வைக்கும் போது

கால்கள் மடிய மறுக்கிறது ....

ஒன்றும் வேண்டாம் என்று படுக்க நினைக்கும் போது 

கட்டில் குளிர்கிறது ......!!!