Monday, December 21, 2009

களைத்துப் போய்விட்டேன்










எதையுமே ஒருதடவையில்  சொல்லி நம்பாதவர்களை 

ஒரு கேள்விக்கு இன்னொரு கேள்வி கேட்பவர்களை 

தவறுகளும் யதார்த்தம் என்று ஏற்காதவர்களை 

பார்த்து பார்த்து.......
 நான் களைத்துப் போனேன்  .......

Tuesday, December 1, 2009

லண்டனில்

எழுத யோசித்து கைகள் வைக்கும் போது

கைகள் விறைத்துப்போகிறது......

சிரிக்க யோசித்து உதட்டை பிரிக்கும் போது

உதட்டில் ரத்தம் கசிகிறது ......

நடக்க யோசித்து கால்கள் வைக்கும் போது

கால்கள் மடிய மறுக்கிறது ....

ஒன்றும் வேண்டாம் என்று படுக்க நினைக்கும் போது 

கட்டில் குளிர்கிறது ......!!!


Wednesday, September 2, 2009

Vanky க்கு

நான் சிரித்து விளையாட குறும்புகள் தந்தார்கள் 
நான் கதைத்து விளையாட பேச்சை தந்தார்கள் 
நான் நினைத்து விளையாட மனதை தந்தார்கள் 
நான் ஒழிந்து விளையாட பொய்கள் தந்தார்கள் 
நான் வாழ்ந்து விளையாட வாழ்க்கையை தந்தார்கள் .,....!

S.........

சிலருக்கு பிறக்கும்போதே ஒரு எதிரியும் பிறந்திடுவன் சிலருக்கு பிறந்த பின் எதிரிகள் உருவாகுவார்கள் --- எனக்கு நான் பிறக்கும் முன்பே பிறந்துவிட்டான்

MY- OFFICE

சின்ன சின்ன தப்புகள்  
சின்ன சின்ன வெற்றிகள்  
சின்ன சின்ன வெறுப்புகள் 
சின்ன சின்ன ஆசைகள்  
சின்ன சின்ன சண்டைகள் 
சின்ன சின்ன பார்ட்டிகள்  
சின்ன சின்ன எதிர்பார்ப்புகள் 
சின்ன சின்ன அதிசயங்கள்  
இவை எல்லாம் சேர்ந்து தான் என் ஆபீஸ்

Tuesday, September 1, 2009

எது தவறு

எதிர்பார்த்தவர்கள் ஏமாத்துவது தவறா


எதிர்பார்ப்பதே தவறா

Monday, August 31, 2009

lol

என்ன எல்லாம் செய்துவிட்டேன் உன்னை 
எப்படியெல்லாம் வருத்திவிட்டேன் உன்னை  
எந்த நிலையும் உன்னை என்னிடம் இருந்து பிரித்துவிடாது 
உன்னை விட எனக்கு இன்று இருப்பது யார் 
என் அருமை மனமே .....

சிலதுக்கு

சிலதை சொல்லுவதுக்குள்  
எழுதிவிடலாம் என்று தோன்றும் ....!! 

சிலதை எழுதுவதுக்குள் 
அழுதுவிடலாம் என்று தோன்றும் ...!! 

சிலதுக்கு அழுவதை விட
சிரித்துவிடலாம் என்று தோன்றும்....!!  

சிலதுக்கு சிரிப்பதை விட  
மறந்துவிடலாம் என்று தோன்றி விடுகிறது ....!!!

Sunday, June 7, 2009

நான் சொல்லவந்தது

வட்ட நிலவு ,
அதிகாலை விடி வெள்ளி ,
ஏரி ஓர பட்ட மரம் ,
மழை ஓய்ந்தும் விழாமல் ஒட்டிக்கொண்டிருக்கும் பனித்துளிகள் ,
இவை எல்லாம் பேசும் என்றால் ....!!!
நான் சொல்லவந்ததை இலகுவாக சொல்லிவிடுவேன் ....!!!!

Friday, April 10, 2009

வேகத்தில்

வந்த வேகத்தில் தொலைந்து போன நினைவுகள்  
விழித்த வேகத்தில் உறங்கிப்போன ஆசைகள்  
செதுக்கிய வேகத்தில் சிதைந்துபோன கனவுகள்
புரிந்த வேகத்தில் மறந்து போன பிரச்சனைகள்
இவைக்கெல்லாம் என்னிடம் பதில் இருந்துவிட்டால் .....!

திருப்தி இல்லாத நான்

தேடல்கள் கிடைப்பதில்லை  என்று
சொல்லிக்கொண்டிருந்தேன் நான்
கிடைத்ததில் தேடாமல் .....!  
நினைத்தவை நடக்கவில்லை என்று 
புலம்பிக்கொண்டிருந்தேன் நான்
நடந்ததை நினைக்காமல் ...!

Friday, April 3, 2009

நமக்குத்தானே தெரியும்

அவர்களுக்கு பிழை சொல்லத்தான் தெரியும் ....!!!
நமக்குத்தானே பிழைவிட தெரியும் ...!!
அவர்களுக்கு மெருகூட்டத்தான் தெரியும் ...!!! 
நமக்குத்தானே செதுக்கத் தெரியும் ..!! 
அவர்களுக்கு புகழ் பாடத்தான் தெரியும் ...!! 
நமக்குத்தானே பாடுபடத் தெரியும் ..!!

நான்

சொல்லமாட்டேனே நான்  
நீ கேட்டாலும் 
இருக்கமாட்டேனே நான் 
நீ சொன்னாலும் 
போகமாட்டேனே நான் 
நீ துரத்தினாலும் 
ஏன் என்றால் ...... 
நான் உன் நாய்குட்டி ...!

Sunday, March 22, 2009

விழுந்துவிட்டேன்

காலத்துக்கு அப்பால் ஓடிக் கொண்டிருந்த என்னை  
கனவுகளுக்கு முன்பே நனவாக்கிக்கொண்டிருந்த என்னை  
வழமைக்கு விலகி வாழ்ந்துகொண்டிருந்த என்னை வலுக்கட்டாயமாக விழ வைத்து கட்டிலில் படுக்க வைத்தான் கடவுள் எனும் கள்ளன் .....!

Saturday, February 21, 2009

எதுவரை இது

எதுவரை இது என்று நினைத்து விட்டால்

இதுவரை இருந்த இன்பங்கள் போய்விடும்

இவை எதுவரை வருமோ வரட்டும்

நினைவுகளாய் நெஞ்சில் நிலைக்கட்டும்

கனவுகளோடு வாழ்வு மட்டும் தொடரட்டும்

என்றும்போல் ....!!!

Saturday, January 10, 2009

Miscommunication

இப்போது எல்லாம் நீ போகிறேன் என்று சொல்லாமலே 
போய்விடுகிறாய் ...!
நான் காத்திருக்கிறேன் என்று சொல்லாமலே
காத்திருக்கிறேன் ....!

ஊமை

வழக்கமாய் நீ கதைப்பதை 
நான் கேட்டுக்கொண்டிருந்ததால் 
நான் ஊமை என்று நீ நினைத்து விட்டாய்

வாழ்க்கை

அர்த்தமில்லாத சின்ன கோவங்கள் 
அக்கறை இல்லாத சின்ன சிரிப்புகள்  
அச்சம் இல்லாத சின்ன பிழைகள் 
அலைச்சல் இல்லாத சின்ன பயணங்கள் 
அத்தைனையும் இல்லாமல் இந்த சின்ன வாழ்க்கை எதற்கு