Sunday, December 14, 2008

கூடாது என்று ஒன்றில்லை

செய்ய முடியாததை நினைக்க கூடாது என்றால் 
நிலாவை தொட்டிருக்கவே மாட்டர்கள் ....!!!
சொல்லமுடியாததை எழுத கூடாது என்றால் 
கவிதைகள் வரைந்திருக்கவே மாட்டார்கள் ....!!
கசப்பதை எல்லாம் உண்ண கூடாது என்றால் 
சிலர் உயிர் வாழவே மாட்டர்கள் .....!!

Tuesday, December 9, 2008

simple as that

அவற்றை விட்டு விலக சொன்னேன் 
அவை விலகவில்லை .....!!
நான் விட்டு விலகி நின்றேன் 
அவையும் விலகிவிட்டன ....!!!

குறி

வெட்ட வெளியில் பறந்துகொண்டிருந்தேன் 
வெய்யில் என்னை சுடவில்லை 
மழை என்னை நனைக்கவில்லை
புயல் என்னை தடுக்கவில்லை 
ஏனென்றால் நான் பறப்பதில் மட்டும் குறியாய் இருந்தேன்