Friday, January 18, 2013

சிட்னியில்


எழுத யோசித்து கைகள் வைக்கும் போது



கைகள் வியர்த்துக் கொட்டுகிறது ......

கதைக்க யோசித்து உதட்டை பிரிக்கும் போது

தொண்டை வறண்டு போகிறது  ......

நடக்க யோசித்து கால்கள் வைக்கும் போது

கால்கள் தீக்கு இரையாகிறது ....

ஒன்றும் வேண்டாம் என்று படுக்க நினைக்கும் போது 

கட்டில் சுடுகிறது  ......!!!

Wednesday, October 31, 2012

நம்பிக்கை

நடக்கும் என்று நம்ப தொடங்கினேன்
நடக்கவும் தொடங்கியது ....!

Thursday, May 24, 2012

பொறுப்பு


 செய்  என்று  சொல்லிவிட்டு பாராமல்  இருப்பது 
செய்  என்று  சொல்லிவிட்டு பார்த்துக்கொண்டிருப்பதை விட
 பொறுப்பை உணர்த்துகிறதே ....!

Sunday, May 16, 2010

Exam நேரம் மட்டும்

வராத நல்ல படங்கள் எல்லாம்
வந்து தொலைக்கும்.....
கூப்பிடாத உறவுகள் எல்லாம்
பெரிய விருந்து வைக்கும்.....
கிடைக்காத வேலை எல்லாம்
extra hours கிடைத்து தொலைக்கும்....
வராத தூக்கம் எல்லாம்
வலிந்து கண்ணை முட்டும்....
சமைக்காத சாப்பாடெல்லாம்
எந்நேரமும் பசித்து தொலைக்கும்.....
கேக்காத சந்தேகம் எல்லாம்
lecturerஇடம் கேக்க தோன்றும் ....
தொற்றாத காய்ச்சல் எல்லாம்
வலிய வந்து தொற்றி தொலைக்கும் ....
ஓடாத நேரம் கூட
வேகமாய் ஓடி தொலைக்கும் ......

நானோ ஒரு baby...

I am Just A baby
சந்தோசத்திலும் சிலருக்கு கண்ணீர் வருகிறது ...
கோவத்திலும் சிலருக்கு சிரிப்பு வருகிறது ....
விழித்திருக்கையில் சிலருக்கு கனவு வருகிறது ...
இவை எல்லாத்துக்கும் என்னிடம் அர்த்தம் கேட்டால் ....

Monday, December 21, 2009

களைத்துப் போய்விட்டேன்










எதையுமே ஒருதடவையில்  சொல்லி நம்பாதவர்களை 

ஒரு கேள்விக்கு இன்னொரு கேள்வி கேட்பவர்களை 

தவறுகளும் யதார்த்தம் என்று ஏற்காதவர்களை 

பார்த்து பார்த்து.......
 நான் களைத்துப் போனேன்  .......

Tuesday, December 1, 2009

லண்டனில்

எழுத யோசித்து கைகள் வைக்கும் போது

கைகள் விறைத்துப்போகிறது......

சிரிக்க யோசித்து உதட்டை பிரிக்கும் போது

உதட்டில் ரத்தம் கசிகிறது ......

நடக்க யோசித்து கால்கள் வைக்கும் போது

கால்கள் மடிய மறுக்கிறது ....

ஒன்றும் வேண்டாம் என்று படுக்க நினைக்கும் போது 

கட்டில் குளிர்கிறது ......!!!