Saturday, September 20, 2008

அந்த குழந்தை

என் மடியில் ஏறியிருந்த அந்த குழந்தை
என் கையில் இருந்த ரேகைகளை எண்ணிக்கொண்டிருந்தது ....!
எண்ணிமுடியாது என்பதால்
என் விரல்களை எண்ணத் தொடங்கியது
இடையில் கணக்கு பிழைத்துப் போனது ....!
என்னை ஒருதடவை பார்த்துவிட்டு
பேசாது இருந்துவிட்டது - இவள்
கைகளிலும் ஏதோ கோளாறு என்று ...!!!