Sunday, September 28, 2008

என் பக்தி

பிடித்து தைக்க இடம் இல்லாத அளவுக்கு
கிழிந்து போன சட்டை .....!
வாரினால் சீப்பே உடைந்து போகும் அளவுக்கு
சிக்கிப்போன தலை மயிர் ...!
என்னிடம் வந்து ஐந்து ரூபாய் கேட்டாள்
கையை விட்டு கிண்டி எடுத்து
இரண்டு ரூபாய் கொடுத்தேன் ....!
நீ தெய்வம் என்று சொல்லிவிட்டு
கும்பிட்டு சென்றாள் .....!

கழுத்து நிறைய மின்னிக்கொண்டு
தங்க மாலைகள் ...!
உடம்பு முழுக்க சுத்தி கட்டியபடி
காஞ்சிபுர பட்டு சேலை ....!
நான் போய் தெய்வமே என்று
கும்பிட்டுவிட்டு - ஆயிரம் ரூபாய்
போட்டுவிட்டு வந்தேன்
உண்டியலில் .....!