Thursday, November 27, 2008

வாய்ச் சொல்லில் வீரர்

எல்லோரும் சமம் என்பார்கள் 
உண்பதெல்லாம் கொடுத்து உண்பார்கள் 
செய்வதெல்லாம் சேர்ந்து செய்வார்கள் 
உதவி என்றால் ஓடிவருவார்கள் 
காதல் கலியாணம் என்றால் மட்டும்
சரிவராது என்பார்கள் ......!!!

நிறைவு

கால் உடைந்தும் வால் ஆட்டிக்கொண்டிருக்கும் - நாய்
நீர் இழந்தும் பூத்துக்கொண்டிருக்கும் - மரம் 
வீடு இழந்தும் ரோட்டில் விளையாடும் - ஏழை குழந்தை 
எல்லாம் இருந்தும் மனம் நொந்தபடி எப்போதும் - அவர்கள்

அக்கறையின்றி

மரங்கள் எல்லாம் ஆடிக்கொண்டிருந்தன
அலைகள் எல்லாம் ஓடிக்கொண்டு இருந்தன  
காகிதங்கள் எல்லாம் பறந்துகொண்டிருந்தன  
முகில்கள் எல்லாம் கறுத்துக்கொண்டிருந்தன
நான் குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருந்தேன் ...!!

Monday, November 17, 2008

உறக்கம்

வெளியே நித்திரை கொள்ளமுடியாமல்  
அழுதுகொண்டிருந்த என் நாய் குட்டியை  
உள்ளே கள்ளமாக கொண்டுவந்து  
தட்டிக்கொடுத்தேன் உறங்கிவிட்டது ... 
உள்ளே படித்துக்கொண்டிருந்த என் புத்தகத்தின் மேல் ....!

Saturday, November 15, 2008

பார்ப்போம்

விடிவுக்காக எழுதிக்கொடிருக்கிறேன் 
பார்ப்போம் விடிகிறதா என்று ...!!  
முடிவுக்காக எழுதிக்கொடிருக்கிறேன்  
பார்ப்போம் முடிகிறதா என்று ...!!  
தெளிவுக்காக எழுதிக்கொடிருக்கிறேன்  
பார்ப்போம் தெளிகிறதா என்று ...!!

தயார்

எழுவதுக்காக விழுவது என்றால் 
நான் விழத் தயார் ,.....! 
கிடைப்பதற்காக இழப்பது என்றால் 
நான் இழக்க தயார் .....!! 
சிரிப்பதுக்காக அழுவது என்றால்  
நான் அழத் தயார் ...!! 
வெல்வதுக்காக தோற்பது என்றால்  
நான் தோற்கத் தயார் ....!!

Friday, November 14, 2008

மனமே

அவர்கள் சொல்வார்கள் என்பதை விட்டுவிடு 
நீ கேட்டுவிடு ....!  
அவர்கள் கேட்பார்கள் என்பதை விட்டுவிடு  
நீ சொல்லிவிடு ...!  
உலகம் மாறும் என்பதை விட்டுவிடு 
நீ உன்னை மாற்றிவிடு ....!

Sunday, November 9, 2008

அவனுக்கு கிடைத்தவை

அவனுக்கு ஒரு உயிர் கிடைத்தது ....!  
அதனுடன் ஒரு இதயம் கிடைத்தது ....!  
இதை காக்க ஒரு மனம் கிடைத்தது ...!  
படித்தான் அறிவு கிடைத்தது ...!  

சிரித்தான் அன்பு கிடைத்தது ...!  

உழைத்தான் உயர்வு கிடைத்தது ....!  

நினைத்தான் நினைத்தது கிடைத்தது ...!! 
 
அவன் அவனுக்கு கிடைத்தான்

Sunday, November 2, 2008

இழப்பு

பணம் இழந்தேன்
உழைத்துக்கொண்டேன் ....!  
பொருள் இழந்தேன் 
வாங்கிக்கொண்டேன் ....!!
 
உறவுகள் இழந்தேன்  
உருவாக்கிக்கொண்டேன் ....! 
நினைவிழந்தேன்  
ஞாபகப் படுத்திக்கொண்டேன் ....!! 

எனை நான் இழந்தேன் 
எல்லாம் இழந்தேன் ...!!!!!

கிடைப்பதில்லை

சந்தர்ப்பம் கிடைத்தபோது 
மனம் விடவில்லை ....!!
மனம் இருக்கும்போது 
சந்தர்ப்பம் கிடைக்குதில்லை ......!!!

Saturday, November 1, 2008

காலம்

நான் வந்திருக்கும் இடம்
சரியானதா என்று முடிவேடுப்பதுக்குள்  

நான் வந்த வேலை  
முடிந்துவிட்டது ....!!!

சிதறிவிட்ட நான்

சிதறிவிட்ட என்னை - நான்  

தேடிக்கொண்டிருக்கிறேன் ....! 

தேடி எடுத்து  

ஒழுங்குபடுத்துவதுக்கு ....!