Saturday, October 18, 2008

உன்னாலே

சில சமயம் நான் தொலைந்தது போயிருக்கிறேன் 
என் நிழல்களுக்குள் ...!
சில சமயம் நான் மறந்து போயிருக்கிறேன் 
என் நிஜங்களை ...!
சில சமயம் நான் பறந்து போயிருக்கிறேன் 
என் கனவுகளுக்குள் ...!  

சில சமயம் இவை எல்லாம் உன்னாலே 

வாழ்க்கை

காலங்கள் நம்மை இடம் 
மாற்றியது ....!
நினைவுகள் நம்மை நினைக்க
வைத்தது ....!
விடியல்கள் நம்மை நம்ப 
வைத்தது ...!
கனவுகள் நம்மை ஜெயிக்க 
வைத்தது ....!

பொழுதுகள்

அந்த பொழுதுகள் எல்லாம்
மறந்து போயின ......! 
இந்த பொழுதுகள் எல்லாம் 
நினைவாய் மாறின .....! 
எந்த பொழுதுகள் எல்லாம்  
தொடரப் போகின்றனவோ ....!!

Thursday, October 2, 2008

அவள்

எழும்புவதுக்கு வழியில்லாமல்
நினைவில்லாமல் விழுந்துகிடந்த - அவளை
தீண்டுவதுக்கு கூட மனமில்லாமல்
வேடிக்கை பார்த்தவண்ணம் பலபேர் .....!!!

அவள் -- நகரம் முழுக்க பலர்
தீண்ட விரும்பாத அழுக்குகளை
அள்ளிப் போட்டுக்கொண்டு இருப்பவள் ....!