Friday, August 29, 2008

இவை எல்லாம் இவை அல்ல

கலைந்திருப்பவை எல்லாம்
கனவுகள் அல்ல ....!
நடந்திருப்பவை எல்லாம்
நினைத்தவை அல்ல .....!
கிடைத்திருப்பவை எல்லாம்
கொடுத்தவை அல்ல ....!
மறந்திருப்பவை எல்லாம்
மறுத்தவை அல்ல ....!
நினைவில் நிற்பவை எல்லாம்
நிஜங்களும் அல்ல .....!

சந்தோசம்

சந்தோசத்துக்காக அழுது
கிடந்த என்னை - நீ
சந்தோசத்தில் அழ வைக்கிறாய்
ஆனந்த கண்ணீராய் .....!

Thursday, August 28, 2008

முகமே

நான் சந்தோசமாய் இருக்கும் போது தான்
என் முகத்தை கண்ணாடியில்
பார்க்கவேணும் போல் இருக்கிறது....!

Monday, August 25, 2008

எழுத மறந்தவை

மறந்து போன என் நினைவுகளை
தேடுகிறேன் - எழுதாமல்
விடுபட்ட என் கவிதைகளை
எழுதுவதுக்கு ....!

அவளின் அழுகை

இறந்து போன உறவுகளுக்காக
அழுதுகொண்டு இருக்கிறாள் --- தொட்டிலில்
பாலுக்காக அழுதுகொண்டு இருக்கும்
குழந்தையை மறந்து விட்டு

Friday, August 22, 2008

ஒன்றும் இல்லாமல்

சந்தோஷமான நாட்களையும்
துக்கமான நாட்களையும்
எண்ணிக்கொண்டு போனேன் என் வாழ்நாளை கணக்கிடுவதுக்கு
இவை இரண்டும் இல்லாத நாட்களை மறந்துவிட்டு ....!

தயார்

ஒரு நாள் ......
என் கனவுகள் நனவாகும்
என் ஆசைகள் நிறைவேறும்
என் துன்பங்கள் தொலைந்துபோகும்
என் குழப்பங்கள் தெளிவாகும்
என்றால் நான் இன்னும் வாழ தயார் ....!
இல்லையேல் நான் என்னும் போராடவும் தயார் ....!

காத்துக்கிடப்பு

வானம் நிலவுக்காக காத்துகிடக்கிறது
நிலவு இரவுக்காக காத்துகிடக்கிறது
இரவு எனக்காக காத்துகிடக்கிறது
நான் எதுக்காக காத்துகிடக்கிடக்கிறேன் என்று புரியவில்லை ......!

கோவம் .. நேசம் ...

இருக்கும் வரை தான் உன்னோடு கோவம்
இல்லாத போது உன்மீது நேசம்
ஏன் என்றால் உன் அருமை அப்போது தான் தெரியும்

Monday, August 18, 2008

சந்தோசத்தில் என் மனம்

சந்தோசமாய் இருக்கும் போது
சத்தமின்றி இருந்து பார்த்தேன்
என் மனம் என்னவெல்லாம்
நினைக்கிறது என்று கண்டுபிடிக்க .......!
அது சொன்னது இப்போ என்னிடம்
நினைக்க ஒன்றும் இல்லை என்று .....!

Sunday, August 17, 2008

பறந்து பார்

பட்டாம் பூச்சிகளை பிடித்துக்கொண்டு
அழகு பார்த்துகொண்டிருந்தேன் ....!
அது சொன்னது பிடித்துப்பார்க்கதே
நீயும் பறந்து பார் என்று ....!

அடையாளம்

அடர்ந்த காடு , சின்ன ஓடை
அழகிய மரம் , அதன் அடியில்
ஒரு குடில் .....!
இலைகளால் ஒரு கூரை
அதன் அடியில் ஒரு யன்னல் ...
அதில் கம்பிகள்
அதை பிடித்துக்கொண்டு
அழகிய விரல்கள் ....!
கவ்விகொண்டிருக்கும் சின்ன மோதிரம் ......
பொறித்திருக்கும் உன் முதல் எழுத்து
ஐம்பது வருட வாழ்க்கையின் அடையாளமாய் ....!

Saturday, August 16, 2008

நான் நானாக

நான் என்னை பார்த்துக்கொள்வதால் தான்
நீ என்னை இப்போ பார்க்க முடிகிறது
அதே நானாக .....!

அதிசயம்

நான் ஒரு அதிசயம் ....!
எல்லை இல்லாத துன்பத்திலும் சிரிக்கிறேன்....!
அளவு கடந்த சந்தோசத்திலும் அழுகிறேன் ....!

Thursday, August 14, 2008

தேடுகிறேன் என்னை

காலத்தின் ஓட்டத்தில்
தொலைந்து போயிருக்கும் என்னை தேடுகிறேன்....!
வாழ்க்கையின் தீபத்துக்குள்
உருகிப்போயிருக்கும் என்னை தேடுகேறேன் ...!
கவலையின் கோபத்தில்
இறுகிப்போயிருக்கும் என்ன தேடுகிறேன் ...!

என்னை

மனம் கலைந்து,
நினைவுகள் தொலைந்து
உண்மைகள் ஒழிந்து
விருப்பங்கள் அழிந்து
போய் இருக்கும் என்னை
யாருக்கு தான் பிடிக்கும் .....!

Sunday, August 10, 2008

தயார்

இப்போ வேண்டுமானாலும் இறக்க
நான் தயார் என்றாயே ....!
உன் ஆன்மாவுக்கு அழிவே இல்லை என்று
தெரிந்துகொண்டு ....!!!!

ஆசை

ஆசையே இல்லாமல் வாழப்போகிறேன்
என்றாயே ....!
வாழ வேண்டும் என்ற ஆசையோடு ....!

ஏய் பட்டாம் பூச்சி .......!

ஒரு நாள் உன்னை எட்டிப் பிடிக்காமல்
விடமாட்டேன் பட்டாம் பூச்சியே ........!
நீ என்னை அடிக்கடி சுதந்திரம்
இல்லாதவள் என்று குத்திக்காட்டிக்கொன்று இருக்கிறாய் .........!

Saturday, August 9, 2008

கைவிடப்பட்ட சிலையாய் இருந்த என்னை
சிலகாலமாய் செதுக்குபவன் நீ ............!
எனக்குள் இருக்கும் குழந்தைக்கு
பெயர் வைத்தவன் நீ ....!
உனக்குள் இருக்கும் குறும்புக்கு
கொடி அசைத்தவள் நான் ..................!

சிறகுகள்

அந்த வண்ணாத்தி பூச்சிக்கு
இரண்டு சிறகுகள் ....... வானம் எங்கும் பறப்பதற்கு .......!
என் சிந்தனைக்கு
ஆயிரம் சிறகுகள் ....... வாழ்க்கை எங்கும் பறப்பதற்கு .......!
பசித்திருந்த பூமிக்கு மழை போல
என் கவிதைக்கு உன் எதிர்பார்ப்பு
நான் அவன் தொலைந்துவிட்டான்
என்று தேடிக்கொண்டிருந்தேன்
ஆனால் அவன் தொலைத்திருப்பது
என் காதலை ....!

உனக்கு தெரியும்

இதயத்தில் இருக்கும் என் சந்தோசத்தை
விழிகளால் விளங்கி கொள்ள உன்னால் மட்டும் தான் முடியும்
ஏன் என்றால் என் இதயத்தை விழிகளால் பார்க்க
உனக்கு மட்டும் தான் தெரியும் ............!